நமது கடந்தகால வரலாறு என்பது சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்மை நம்பவைக்கும் வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என மேலும் மேலும் உறுதிபடுத்துகின்றன விவரிக்க இயலாத சில கண்டுபிடிப்புகள். வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களின் தொழில்நுட்ப மேம்பாடு என்பது நமக்கு போட்டியாக அல்லது நம்மை விட மேம்பட்டதாக இருந்திருக்கின்றன.

உலகம் முழுவதும், நாடோடி மக்கள் மற்றும் பழங்கால கலாச்சாரங்கள் இதுபோன்று திடீரென மேம்பாடுகளை அனுபவித்துள்ளதாக தெரிகிறது. இந்த கலாச்சாரங்கள் வேற்றுகிரகவாசிகளின் கலாச்சார ஊடுருவலாக இருக்கும் என்கிறது ஒரு கோட்பாடு. வேற்றுகிரகவாசிகள் தங்களுடன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் அறிவையும் கொண்டுவந்தனர். அது தான் நவீன சமூகத்திற்கு விதையாக அமைந்தது. இதுபோன்ற நம்பமுடியாத கட்டமைப்புகளை உருவாக்க தேவையான நுணக்கமும், தொழில்நுட்பமும், தற்போதுள்ள நவீன அறிவியல் விஞ்ஞான யுகத்தில் கூட கண்டறியப்படவில்லை.

முன்பின் அறியாத சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட பழங்கால மற்றும் மர்ம கட்டமைப்புகளுக்கான ஆதாரங்கள் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் நிலையில், அந்த முன்பின் அறியாத சமூகம் வேற்றுகிரகவாசிகள் தான் என்றும், அவர்கள் தான் எகிப்து மற்றும் மாயன் பிரமீடுகள், பெருவில் உள்ள நாஷ்கா கோடுகள், ஸ்டேன்ஹென்ச் மற்றும் இதர பழங்கால கலைப்பொருட்களை கட்ட தொழில்நுட்பங்களை வழங்கினார்கள் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!