ஸ்பெயினில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சென்னை சேர்ந்த மாணவி சபிதாஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் சபிதாஸ்ரீ, தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் இவர், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பங்கேற்று இந்திய அளவில் விளையாட தகுதியை பெற்றார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி உலகலளவிலான சதுரங்க போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற மாணவி சபிதாஸ்ரீ, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!