கல்லூரி பேராசிரியர்களுக்கான நெட் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சிபிஎஸ்இ சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்தத் தேர்வு, இரண்டாவது முறையாக இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 89 மையங்களில் 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

 

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 24 மையங்களில் 12 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 3 தாள்களை கொண்ட தேர்வு, காலை 9.30 மணி முதல் 4 மணி வரை நடைபெறும்.

error: Content is protected !!