நாகர்கோவிலில் குழந்தைகள் தின சிறப்பு சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற மாவட்ட
அளவிலான இப்போட்டியில், பல்வேறு பகுதியிலிருந்து 5 முதல் 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 300 பேர் பங்கேற்றனர். பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சிலம்பம் அசோசியேஷன் தலைவர் டாக்டர்  ஜெ. அர்னால்டு அரசு பரிசு வழங்கினார்.

error: Content is protected !!