தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், சுயவேலைவாய்ப்பு திட்டம், மற்றும் பல்வேறு நிதி உதவிகளுக்கான திட்டங்களுக்கு 18 முதல் 65 வயதுடைய தகுதியானோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சம் ஆகும். புகைப்படம், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் எண், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் http://application.tahdco.com எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும் (அலுவலக நேரத்தில்) பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.60 ஆகும். இத்தொகையில் கணினி இயக்குபவருக்கு ரூ.30-ம், மீதமுள்ள தொகை புகைப்படம் மற்றும் ஆவணங்களை ‘ஸ்கேன்’ செய்யவும் பயன்படுத்தப்படும். இத்தொகைக்கான கணக்கு பதிவேடும் பராமரிக்கப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்தவுடன் விண்ணப்பதாரருக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-25246344 எனும் எண்ணை தொடர்புகொள்ளலாம். மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

error: Content is protected !!