சென்னை பல்கலைக்கழக பருவத் தேர்வு முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் தொடர்பாக, தேர்வர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கடந்த நவம்பரில் நடந்த இளநிலை,  முதுநிலை பட்டத் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 4) வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் தொடர்பாக, மறுகூட்டலுக்கோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 6-ஆம் தேதி முதல் வரும் 12-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலமாக ஒரு பாடத்துக்கு ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதேபோன்று, 2015-16-ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முன்பாக இளநிலை பாடம் படித்து இப்போது தேர்வெழுதியோரும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!