கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு வருகிற 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் கிறிஸ்துமஸ் ஈவ் கடைப்பிடிப்பை முன்னிட்டு டிச. 24ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வருகிற ஜனவரி மாதம் 3ஆவது சனிக்கிழமை (ஜன.19) பணி நாளாக இருக்கும். மேலும், டிச. 24ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!