indian_team8181

 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. எனவே, 2-ஆவது ஆட்டத்தில் வென்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க இயலும் என்ற நிலையில், இந்தியா களம் காண்கிறது. தொடக்க ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்தியா, அதிலிருந்து மீண்டு வரும் முனைப்பில் உள்ளது. ஏனெனில், கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 7 டி20 தொடர்களை கைப்பற்றியுள்ளது. எனவே, இந்தத் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் 2-ஆவது டி20 ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

மழையால் டாஸ் நிகழ்வு சற்று தாமதமானது. இதன்பிறகு டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் டி20 ஆட்டத்தில் விளையாடிய அதே அணியை இந்த ஆட்டத்துக்கும் அவர் தேர்வு செய்துள்ளார்.

error: Content is protected !!