தக்கலையில் கொடிநாளை முன்னிட்டு  மாணவர்,  மாணவிகளின் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பாக நடைபெற்ற  இப்  பேரணியை  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா  கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த பேரணியானது  மேட்டுக்கடை, காமராஜர்  பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று,  வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.  இதில், பங்கேற்ற மாணவர்,  மாணவிகள்  கையில்  உண்டியல் ஏந்தி பொதுமக்களிடமும்,  வர்த்தகர்களிடமும் கொடிநாள் வசூல் செய்தனர்.
இதில்  கல்குளம் வட்டாட்சியர் ராஜாசிங், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார்,  தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஜாண் விஜயன் , ஆசிரியர்கள்,  மாணவர்,  மாணவிகள் மற்றும்  தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!