சென்னை: தேசிய திறனாய்வு தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 4ல் நடத்தப்பட்டது. இதற்கான விடை குறிப்பு, இன்று,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், அரசு தேர்வு துறையால் வெளியிடப்படுகிறது.

error: Content is protected !!