நாகர்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசிய கொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா சிறப்பாக நடந்தது.

error: Content is protected !!