30-ந்தேதி கடைசி நாள்: ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களா? மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய சுற்றறிக்கை நீட் தேர்வுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் மாணவர்களை விண்ணப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகிறார்கள். மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் இணையதள வசதி இல்லாமல் இருந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும்.மேலும் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனைத்து வசதிகளை செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் பிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்களா? என்பதை தலைமை ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!