குழித்துறை மறைமாவட்டம் கூட்டாண்மை நிர்வாகத்துக்குள்பட்ட நெல்லிக்காவிளை தூய மேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தலைமை ஆசிரியர் டென்னிஸ் வரவேற்றார். குழித்துறை மறை மாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ், ஸ்மார்ட் கிளாசை தொடங்கிவைத்தார். பள்ளித் தாளாளர் இருதய தாசன் இயற்கை உணவுகள் கண்காட்சியை திறந்து வைத்தார். மேல்புறம் வட்டார கல்வி அலுவலர் லதா அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார்.
பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவி பால்தங்கம், கிராமக் குழுத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.
கண்காட்சியை பாகோடு திரு இருதய உயர்நிலைப் பள்ளி, திக்குறிச்சி புனித கபேரியல் நடுநிலைப் பள்ளி, ஆலம்பாறை புனித வென்ஸஸ்லாஸ் தொடக்கப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். ஆசிரியை ரீனா நன்றி கூறினார்.

error: Content is protected !!