பகுப்பாய்வாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை ரசாயனர், ரசாயனர் மற்றும் தொல்லியல் ரசாயனர் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிக அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ஆம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
error: Content is protected !!