தமிழகத்தில் பெட்ரோலின் தேவை 8 விழுக்காடும், டீசலின் தேவை 4 விழுக்காடும் ஓராண்டில் அதிகரித்திருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மாநில செயல் இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்தன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 ஆயிரத்து 257 புதிய சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆயி‌ரத்து 31 விற்பனை நிலையங்களும், புதுச்சேரியில் 36 விற்பனை நிலையங்களும் மொத்தம் ஆயிரத்து 257 விற்பனை நிலையங்கள் அமைக்க உள்ளதாக சித்தார்த்தன் கூறினார்.

இதற்காக மொத்தம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக கூறிய அவர், விற்பனை நிலையம் அமைக்க 65 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!