சென்னை:எட்டாம் வகுப்பு, தனி தேர்வர்களுக்கான, தத்கல் விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களுக்கு, ஜனவரில் நடக்க உள்ள, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் முறையில், சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஜன.,1ல், பனிரெண்டரை வயது முடிந்தோர், விண்ணப்பிக்கலாம்.டிச., 11, 12 மற்றும் 13ம் தேதிகளில், அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று, ‘ஆன்லைன்’ வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கான விரிவான தகவல்களையும், சேவை மைய விபரங்களையும்,www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!