அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.இதையடுத்து ஆசிரியர் நியமனம், புத்தகங்கள் அச்சிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் அவற்றுக்கான வகுப்புகள் ஜுன் முதல் வாரத்தில்முறையாகத் தொடங்கும். எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித்துறையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் தற்காலிகமாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர் சேர்க்கைக்குப் பின்னர் ஆசிரியர் நியமனம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.

error: Content is protected !!