விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக 4 சினூக் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு செல்லப்படும். இந்திய விமானப் படையில் நிகழாண்டு

அறிவுக்கும், தேர்வு மதிப்பெண் ணுக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து, ‘மக்கள் நல்வாழ்வும் மருத்துவக் கல்வியும்’ என்ற தலைப்பில் சென்னை

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம் செய்ய வரும் 16ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும்,

குரூப் – 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப் – 1 முதல்நிலைத் தேர்வு, மார்ச், 3ம் தேதியும், முதன்மை எழுத்து தேர்வு, மே மாதம் கடைசி

ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் கிளாஸை பொறுத்தவரை தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது, டெண்டர் உறுதியானதுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாரா கிளைடர் விமானப் பயிற்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்தவர் ராஜா ஞானப்பிரகாசம்.  இவர் கிளைடர் விமானத்தை எவ்வாறு தயாரிப்பது?  அதில் எவ்வாறு பறப்பது? என்பது குறித்து தமிழகம் முழுவதும் மாணவர், மாணவிகளுக்கு

பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள்வீச்சுப் போட்டியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான வாள் வீச்சுப்  போட்டிகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 65  சிற்றினங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பறவைகள் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நிகழாண்டு இக்கணக்கெடுப்புப் பணி  3 கட்டங்களாக நடைபெற்றது.

error: Content is protected !!