திருச்சி: டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை, அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு

இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 7) பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: இந்தியப் பெருங்கடலில் மாலத் தீவு, லட்சத்தீவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ) தொடர்பான இறுதி விடைக் குறிப்பு www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை முதல் வெளியிடப்படவுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (டிச.7) கடைசி நாளாகும். ஜே.இ.இ., நெட் போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வுகள் முகமையிடம் (என்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீட்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது செயல்பட தொடங்கும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015-ம் ஆண்டு

ஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் என்று வங்கியிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. பதிவு: டிசம்பர் 07,  2018 03:15 AM சென்னை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திருட்டு, மோசடி சம்பவங்களும் விஞ்ஞானரீதியில்

ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு பிளேட்டில் ஏற்பட்ட விரிசலால் ரயில் போக்குவரத்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 104 வயது பாம்பன் பாலத்தின் பலம் குறித்த கவலை எழுந்துள்ளது. பாம்பன் கடலில் ரயில், கப்பல்கள் கடந்து செல்லும்

error: Content is protected !!