சென்னை: சென்னையில் நடக்கும், மாநில அளவிலான, ஓபன் சதுரங்க போட்டியில், நாளைக்குள் பதிவு செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கேளம்பாக்கம், சிப்காட், ஐ.டி., பூங்காவில், மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டி, எஸ்.வி.ஏ., சதுரங்க அகாடமி சார்பில், பிப்., 2ல் நடக்கிறது.இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 300 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறும், 115 பேருக்கு, மொத்தம், 1.3 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.இதில் பங்கேற்க, நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டியில், பதிவு செய்யாதவர்களுக்கு, அனுமதி இல்லை.இந்த போட்டியானது, இரு நாட்களுக்கு நடக்கிறது. இது குறித்த, மேலும் விவரங்களை, www.tamilchess.com எனும், இணைய தளத்தில் அறியலாம். மேலும், 8838229938 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!