தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் கல்விக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை இப்போது உள்ளதைக் காட்டிலும் பன்மடங்கு உயர்த்தப்பட உள்ளது. குறிப்பாக ரூ. 100க்கும் குறைவாக இருந்த கட்டணங்கள் ரூ. 500 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறுகையில், மற்ற பல்கலைக்கழகங்களில் உள்ளதைப் போல, சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்றார்.

error: Content is protected !!