குமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கான திறன் பயிற்சி முகாம்  திங்கள்கிழமை (பிப்.11)  நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற வசதியாக திறன் பயிற்சி பயிலரங்கம்  பிப்.11ஆம் தேதி காலை 10.30 மணி அளவில், கோணம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இத்திறன் பயிற்சி பயிலரங்கத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகள், திறன் பயிற்சிகளின் பயன்கள், தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கான அரசுத் திட்டங்கள் குறித்த சிறப்புரைகள் துறை வல்லுநர்களால் வழங்கப்படும். இதில் பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!