நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.21) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மல்லிகாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
நாகர்கோவில் கோணத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.21) காலை 10 மணிக்கு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், பிற மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமில் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியானவர்களை தேர்வு செய்கின்றனர். ஆகவே, இம்முகாமில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஆசிரியர்கள் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் நிறுவனங்களின் பணிக்கு தேர்வு செய்வோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!