பொறியியல் கல்லூரிகள் 2019-20 கல்வியாண்டு அனுமதி  பெறுவதற்கு ஏஐசிடிஇ-யிடம்  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் அபராதத் தொகையுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 13 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் 2019-20 கல்வியாண்டுக்கான புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி, ஏற்கெனவே உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி நீட்டிப்புக்கான நடைமுறைகளை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்) அண்மையில் தொடங்கியது.

இதற்கான விண்ணப்பப் பதிவை ஜனவரி 14-ஆம் தேதி வரை வரவேற்றது. விண்ணப்பிக்க பிப்ரவரி 3 கடைசி என அறிவித்திருந்தது. இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!