உலகக்கோப்பை ஹாக்கி போட்டி இன்று முதல் இந்தியாவில் தொடங்கியது. மொத்தம் 4 பிரிவுகளில் 16 நாட்டின் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன

இன்றைய முதல் நாள் போட்டியில் சி பிரிவில் உள்ள இந்திய ஹாக்கி அணியும், தென்னாப்பிரிக்கா ஹாக்கி அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே, போட்டி இந்திய வீர்ர்களின் கையில் தான் இருந்தது. இந்திய வீர்ர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கோல் போட்டு அசத்தி வந்தனர். இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தென்னாப்பிரிக்கா அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போடமுடியவில்லை. இந்திய அணியின் மந்தீப் சிங், ஆகாஷ்தீப்சிங், லலித உபாதே ஆகியோர் தலா ஒரு கோலும் சிம்ரஞ்சித்சிங் இரண்டு கோல்களும் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றபோது இந்திய அணி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!