சென்னை:கலைச்செம்மல் விருதுக்கு, ஓவியர்கள் விண்ணப்பிக்க, தமிழக கலைப் பண்பாட்டு துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை கமிஷனர், ராமலிங்கம் கூறியதாவது:சிறந்த ஓவியர்களுக்கு, கலைச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு கீழ் உள்ளோர்; 30 வயதை கடந்தவர்கள் என்ற அடிப்படையில், மரபு வழி, நவீன ஓவிய பிரிவில், தலா, 30 பேர் என, மொத்தம், 60 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.இதில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 15 ஆயிரம் ரூபாயும், இளையோருக்கு, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். விருதுக்கான விண்ணப்பத்தை, ‘ஆணையர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர் – 8’ என்ற முகவரிக்கு, இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

error: Content is protected !!