குலசேகரம் அரசுமேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். அதிமுக மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலர் முருகேசன் மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியர் சிவசந்திரன், ஆசிரியர்கள் சுந்தரலீலா பாய், சுனில் பிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 125 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள்
வழங்கப்பட்டன.

error: Content is protected !!