பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கொளப்பாக்கம், கோவூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மௌலிவாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குன்றத்தூரை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், எம்எல்ஏ கே.பழனி, ஸ்ரீபெரும்புதூர் மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன், கல்விக் குழுத் தலைவர் ஏசுபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டு, 1,007 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

error: Content is protected !!