சென்னை: ‘தேர்வு அறைகளில், மொபைல் போன் ஜாமர் கருவி பொருத்த வேண்டும்’ என, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சுற்றறிக்கை விபரம்:இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். எலக்ட்ரானிக் பொருட்கள் வாயிலாக, தேர்வு முறைகேட்டை தடுக்கும் வகையில், ஜாமர் கருவி கட்டாயம் இருக்க வேண்டும்.தேர்வு நடைபெறும் போது பதிவான, கண்காணிப்பு கேமரா பதிவை, பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பல்கலை அதிகாரிகள் கூறுகையில், ‘சுற்றறிக்கை வழக்கமான ஒன்றே. முந்தைய ஆண்டுகளை விட, வரும் ஆண்டுகளில், தேர்வு அறைகளில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும்’ என்றனர்.

error: Content is protected !!