நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பட புத்தகங்களை இழந்து தவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர்.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டித்தது.

error: Content is protected !!