நெல்லையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் 2019 ஜனவரி 27ஆம் தேதி நடைபெறள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக இப்போட்டிக்கு டீ சர்ட் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

நெல்லை மாநகர் பாளையில் நெல்லை மாரத்தான் அமைப்பாளர்கள், நெல்லை ரன்னர்ஸ் டிரஸ்ட் அமைப்பு இணைந்து 2வது ஆண்டாக, வரும் ஜனவரி 27ஆம் தேதி மாரத்தான் போட்டி உள்ளனர். பாளையில் நடைபெற்ற நெல்லை மாரத்தான் 2019 டிசர்ட் அறிமுக விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நெல்லை மண்டல அதிகாரி கெளதமன் மற்றும் அஜித் இனிகோ நெல்லை மாரத்தான் 2019 டிசர்ட்டினை அறிமுகபடுத்தினார்.

இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் 4000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இணைய தளம் மற்றும் மாநகரின் 9 இடங்களில் முன்பதிவு யத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.nellaimarathon.com என்ற வலைதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பதக்கங்கள், டிசர்ட், E-சர்டிபிகேட் மற்றும் காலை உணவும் வழங்கப்படும். மாணவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு. இவ்வாண்டு நெல்லை மாரத்தானுக்கு “Run for you” என்ற வாக்கின் அடிப்படையில் மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதன் மூலம் தனிநபர் உடல் நலன் பேணும் அவசியம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!