ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் டிச.,4ல் விரிசல் ஏற்பட்டதால் புதிய இரும்பு பிளேட் பொருத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது.நேற்று மாலை பாம்பன் பாலத்தில் நடக்கும் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியரா ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.பின் அவர் கூறியதாவது: துாக்கு பாலத்தில் பராமரிப்பு, புதுப்பித்தல் பணி முழுவீச்சில் நடக்கிறது. விரைவில் பணி முடியும். பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்க ரயில்வே அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பபட்டு உள்ளது, என்றார்.

error: Content is protected !!