சென்னை, அரசு பள்ளிகளில் முதல் முறையாக, சென்னை, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், புகைப்பட வருகை பதிவு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.மாணவர்களை புகைப்படம் எடுத்து, வருகைப்பதிவு செய்யும் முறையை, அரசு பள்ளியில் அறிமுகம் செய்ய, பள்ளி கல்வி துறை முடிவு

 சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், படுக்கை வசதியுடைய பஸ்களில், திங்கள் முதல் வியாழன் வரை, 10 சதவீத கட்டணத்தை, அரசு குறைத்துள்ளது.தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், ‘கிளாசிக்’ என்ற, கழிப்பறை, படுக்கை வசதியுடைய, ‘ஏசி’ பஸ்; படுக்கை

கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை

குமரி மாவட்டத்தில் 4 ஜி இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் பிஎஸ்என்எல் மாவட்ட பொது மேலாளர் சஜிகுமார். அருமனையில், பிஎஸ்என்எல் அதிவேக கண்ணாடி இழை இணைய சேவை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியது: குமரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளையும்,

தக்கலையில் கொடிநாளை முன்னிட்டு  மாணவர்,  மாணவிகளின் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பாக நடைபெற்ற  இப்  பேரணியை  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா  கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது  மேட்டுக்கடை, காமராஜர்  பேருந்து நிலையம், பழைய பேருந்து

மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருள்களை பொதுமக்கள் வாங்கி  அவர்களுக்கு உதவ வேண்டும்  என்றார்  குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே. மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் பொருள்கள் தயாரிப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கான  திட்ட விழிப்புணர்வு கண்காட்சியினை

கன்னியாகுமரியில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.  சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 70 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!