குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.18) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து களைந்திடும் வகையில், சார்- ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் 3ஆவது செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.
டிசம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம், வருகிற 18ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு பத்மநாபபுரம் சார்-ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொள்கின்றனர். முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு, உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, மாற்றுத் திறனாளிகள் கோட்ட அளவிலான சிறப்பு குறை தீர் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!