சென்னையில், 8-ஆவது தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து இந்திய வில்வித்தை சங்க தேசிய செயலர் சுபாஷ் சந்திர நாயர் அளித்துள்ள தகவலின்படி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடத்தப்படும் இப்போட்டியானது, சென்னையில் நடைபெறும் முதல் தேசிய உள்ளரங்கு போட்டியாகும்.
இதில் மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். 10, 14, 19 வயது, சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சிறப்பிடம் பெறும் வீரர், வீராங்கனைகள் நியூஸிலாந்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள உலக உள்ளரங்கு வில்வித்தை போட்டியில் பங்கேற்க தகுதிபெறுவர்.

error: Content is protected !!