சென்னை, மாணவர் விடுதிகளில், திடீர் சோதனை நடத்த, கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:உயர் கல்வி நிறுவனங்களில், ‘ராகிங்’கை தடுக்க, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.’வளாகங்களில், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்; ராகிங் தடுப்பு குழு ஏற்படுத்த வேண்டும்’ என, பல உத்தரவுகள்பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இவற்றை செயல்படுத்தாத கல்லுாரிகள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதேபோல், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளும், வகுப்பறை, வளாகம், மாணவ – மாணவியர் விடுதிகள், கேன்டீன், பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில், திடீர் சோதனை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!