சைல்டு லைன் அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், சைல்டுலைன் அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேரணி டெரிக் சந்திப்பு வழியாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

error: Content is protected !!