காப்பீட்டுத் தொகையை 5 லட்ச ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் தொகை 2 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த காப்பீடு தொகை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார். இனி பயனாளர்கள் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லாமல், மருத்துவ சிகிச்சை பெறலாம் எனவும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!