சென்னை, குரூப் – 2 பிரதான தேர்வுக்கு, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஜன., 10 வரை, அவகாசம் தரப்பட்டுள்ளது.குரூப் – 2 பதவிகளில், காலியிடங்களுக்கான முதல் நிலை தகுதி தேர்வு முடிவுகள், இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்கள், பிரதான தேர்வு எழுதும் முன், அசல் சான்றிதழ்களை, அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது.இதன்படி, தேர்வர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, ஜன., 10 மாலை, 5:30 மணிக்குள், இ – சேவை மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வு கட்டணத்துக்கு விலக்கு கேட்காதோர், தேர்வு கட்டணம், 150 ரூபாயை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். தவறினால், தேர்வில் பங்கேற்க முடியாது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே, சான்றிதழ்களையும் பதிவேற்ற முடியும்.இந்த தகவலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!