சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, 14 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, ஆறு அரசு கல்லுாரிகளில், 396 இடங்கள்; 23 சுயநிதி கல்லுாரிகளில், 916 இடங்கள் உள்ளன. பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்கள், சென்னை, நெல்லை – பாளையங்கோட்டை, மதுரை – திருமங்கலம் மற்றும் நாகர்கோவில் – கோட்டாரில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 14 முதல், செப்., 5 வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!