நெல்லிக்காவிளை புனிதமேரி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில்  மனித உரிமை தினவிழா, ஆண்டு தலைப்பு நிறைவு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு  பள்ளி தாளாளர் இருதயதாசன் தலைமை வகித்தார். விழாவில், 5 ஆம் வகுப்பு மாணவி அஸ்மிதா, ஆசிரியை ரீனா ஆகியோர் மனித உரிமை தினம் குறித்து பேசினர்.
கிராம கல்விக்குழு தலைவர் பொன். தர்மலிங்கம்,  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  பால்தங்கம், அன்னையர் குழு தலைவி சசிகலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மனித உரிமை தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகள் மாணவர்களால் நடப்பட்டது. இதில், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் உஷா, லீலாராணி ஆகியோர் செய்தனர்.  தலைமையாசிரியர் டென்னிஸ் வரவேற்றார். ஆசிரியை பேபிகலா நன்றி கூறினார்.

error: Content is protected !!