‘ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை, உடனடியாக பரிசீலித்து, மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும்’ என, சார் – பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.பதிவுத்துறையில், பத்திரப்பதிவுகளை தொடர்ந்து, வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான பதிவுகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும், புதிய திட்டம், டிசம்பர், 10ல் துவக்கப்பட்டது. இத்திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.இதை முன்னிட்டு, சார் – பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு: ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று கோரும் விண்ணப்பங்களுக்கு, மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும் கணினிமயமாக்கப்பட்ட, பத்திரப்பதிவு தொடர்பான வில்லங்க விபரங்களை, மூன்று நாட்களிலும், மற்ற வில்லங்க விபரங்களை, நான்கு நாட்களிலும் வழங்க வேண்டும் சான்றிட்ட பிரதி ஆவண நகல் கோரினால், மூன்று நாட்களில் வழங்க வேண்டும் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பதிவான நாளை தவிர்த்து, இந்த காலவரையறை பின்பற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!