சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ‘தத்கல்’ திட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஜன., 7 முதல், 19 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு, நாளையும், நாளை மறுநாளும், தேர்வுத்துறை சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும்.சேவை மையங்களுக்கு, நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். மையங்களின் விபரங்களை, http://www.dge.tn.gov என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!