‘திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தனியார் தொழிற்பள்ளிகளில் பொறியியல், பொறியியல் அல்லாத 54 நீண்ட கால தொழிற்பிரிவுகள் மற்றும் டிடிசி தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பயிற்சிகளை வழங்கிட புதிதாக தொழிற்பள்ளிகள் தொடக்க அங்கீகாரம் வழங்கவும், ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் தொழிற்பள்ளிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு ஆணை வழங்கவும் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.
2019-2020ஆம் ஆண்டு தொழிற்பள்ளிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு மற்றும் புதிதாக தொழிற்பள்ளிகள் தொடங்க கடந்த ஜன.11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்தில் தகுதியானவர்கள் ஏப். 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!