சென்னை, பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பாளர் நியமனம், மாணவர்களின் விபரங்கள் சரிபார்த்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.செய்முறை தேர்வை, பிப்., 6 முதல் நடத்த, தேர்வு துறை திட்டமிட்டிருந்தது.இந்நிலையில், நேற்று அனைத்து பள்ளிகளுக்கும், தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘பிப்., 1 முதல், 12ம் தேதிக்குள், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்’ என, அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!