சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மார்கழித் திருவிழா தேரோட்டத்தையொட்டி, இம்மாதம் 22ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா தேரோட்டம் இம்மாதம் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, இம்மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையாகும். அதற்கு ஈடாக 2019 ஜனவரி மாதம் 2ஆவது சனிக்கிழமை (12.1.19) மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
இம்மாதம் 22ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அவசரப் பணிகளுக்காக தேவையான பணியாளர்களுடன் செயல்படும் என்றார் அவர்.

error: Content is protected !!