சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தடகளப்  போட்டிகளில் ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

திருவனந்தபுரத்தில் சகோதயா அமைப்பு சார்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஆண்டு விழா கலைப்  போட்டிகள் நடைபெற்றன. 28-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றதில், ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர். ஆண்கள் பிரிவில்  10 ஆம் வகுப்பு மாணவர் சர்வேஸ்வரன், பெண்கள் பிரிவில் பிளஸ் 2 மாணவி ராகி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், பயிற்சி அளித்த  உடற்கல்வி ஆசிரியர்களையும் என்.வி.கே.எஸ். கல்விக் குழுமங்களின் செயலர் வழக்குரைஞர்  எஸ். கிருஷ்ணகுமார் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

error: Content is protected !!